Tuesday, 8 December 2015

moolan

 சுந்தரநாதர்  அன்று  மாலை  இறங்கி  மலை  அடிவாரத்தை  அடைந்தபோது  அவர் கண்ட  காட்சி
அவரை  திடுக்கிட  வைத்தது. அவர்  அந்த  காட்சியை  கன்டு  மிகுந்த  வேதனை யுற்றார் . மூலன்  அங்கு  உயிரற்ற  நிலையில்  இருந்தான் . பசுக்கள்  அவனை  சுற்றி  கண்ணீருடன்  புல்லை  கூட  அருந்தாமல்  மிக்க  விசனத்துடன்  கத்திக்கொண்டிருந்தன . சித்தர்  ஞான  திருஷ்டியால்  அவன்  விதி  முடிந்து  ஈசனை  அடைந்துவிட்டதை  உணர்கிறார் . அந்த  வாயில்லா  ஜீவன்களின்  துக்கம்  அவரை  மிகவும்  நெகிழ  வைக்கிறது . அவைகளை  எப்படியாவது  சமாதானம்  செய்து  அவைகளின்  இருப்பிடத்தை  அடைய  செய்ய  வேண்டும்  என  தீர்மானிக்கிறார் . உடனே  மலைமேல்  ஒரு  மறைவான  இடத்தை  அடைந்து  தன்  உயிரை  மூலனின்  உடலில்  பிரவேசிக்க  செய்து   மூலனை  உயிர்  பெற  செய்கிறார் . தன்  உடலை  மறைவான  இடத்தில்  கிடத்துகிறார் . 

No comments:

Post a Comment