சோழ மன்னன் செய்தி கேட்டு பதைப்புடன் அவ்விடத்திற்கு வந்தார் . நடந்த விவரங்களை கேட்ட மன்னர் மிக்க துக்கமடைந்து ஒரு சிவனடியார்க்கு நேர்ந்த இந்த துன்பம் அவரை மிகையாக பாதித்தது . எறிபத்தர் செய்தது ஞாயமே என்று கூறிய அரசன் அந்த யானைக்கு சொந்தக்காரன் என்ற பொறுப்பில் தானும் தண்டனைக்கு உரியவனே என்று கூறி தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றார். உடனே எறிபத்தர் இத்தனை நல்ல உள்ளம் படைத்த மன்னனை தாம் மனவேதனைக்கு உள்ளாக்கியதை நினைந்து அவரும் தம்மை மாய்த்துக்கொள்ள தயாரானார் . கருணை கடலான ஐயன் தோன்றி யானையையும் பாகனையும் உயிர்பெற செய்தார் .
No comments:
Post a Comment