Wednesday, 24 July 2019

கை   தடிந்த   வரிசிலையான்   கலிக்கம்பர்     கலியன் |

பெண்ணாகடம்   எனும்  ஊரில்   கலிக்கம்பர்   என்றொரு   சிவனடியார்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   எம்பெருமானிடம்   கொண்ட   பக்தி   வியக்கத்தக்கது .  அடியார்களிடம்   அவர்   கொண்ட   மரியாதை   கலந்த   பக்தி   சொல்லில்   அடங்காது .   அவர்   மனைவியும்   அவருக்கு   தக்க   துணையாவார் .   வரும்   அடியாரை   அமர   வைத்து   அவர்   பாதங்களை   நீரால்   கழுவி   பூஜித்து   பிறகு   அமர   செய்து   அமுது   படைப்பார் .     இவ்வாறு   அடியார்களை   பேணுதல்   செம்மையாக   நடந்து   கொண்டிருக்கையில்   ஒரு   நாள்   ஒரு   அடியார்   வந்தார் .  அம்மையார்   அவரை   பார்த்தவுடன்   திடுக்கிட்டார் .   அவன்   முன்பு   இவர்    வீட்டில்   வேலைக்காரனாக   இருந்தவன் .  எதோ   மனக்கசப்பில்    சண்டையிட்டுக்கொண்டு   வேலையை   விட்டு   பிறகு   எவ்வாறோ   சிவ   தொண்டனாகி   இருக்கிறான் .  ஆகையால்   அம்மையாருக்கு    ஒரு வெறுப்பு   கலந்த   தயக்கம் .    

No comments:

Post a Comment