கலிக்காமர் தன் மனைவியின் முகமாற்றத்தையும் அடியாரின் முகத்தையும் கண்டதும் அவருக்கு மனைவியின் தயக்கத்திற்கு காரணம் விளங்கி விட்டது . அவர் கோபம் எல்லை மீறியது . அவள் கையில் நீரை தட்டிவிட்டு அவள் கையை நீட்ட சொல்லி அரிவாளால் வெட்டி எறிந்தார் . பிறகு தானே அவர் பாதங்களை கழுவினார் .. தர்மம் தவறாத அவர் மனைவியும் தன் தவறுக்காக மிக வருந்தி தன்னை மன்னித்து விடும்படி ஈசனிடம் மன்றாடினாள் . ஒருவன் திருநீறு பூசி உன் அடியாராக ஆடை அணிகிறானோ அப்போதே அவன் பு னி தனாகிறான் . அதை அறிந்தும் நான் தவறு செய்து விட்டேனே . என்று மிக வருந்தி ஈசனிடம் தன்னை மன்னித்து அருள வேண்டுகிறாள் . கருணைக்கடலான ஈசன் மன்னித்து வெட்டுண்ட அவள் கை மீண்டும் வளர செய்கிறார் . மகிழ்ந்து தம்பதிகள் வெகு காலம் எம்பெருமான் அடியார்களாக வழ்ந்து சிவமாகினார்கள் .
No comments:
Post a Comment