Wednesday, 31 July 2019

தொண்டை   நாட்டில்   திருவொற்றியூர்   என்னும்   இடத்தில்   சேணியர்   குலம்   சேர்ந்த   கலியன்   என்பவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  ஒற்றியூர்   உடையாரிடம்   அளவு   கடந்த  பக்தி   கொண்டிருந்தார் .  தம்   செக்கில்   ஆட்டிய   எண்ணெய்   கொண்டு   அவர்   ஆலயத்தில்    இரவும்   பகலும்   விளக்கேற்றி   மகிழ்ச்சி   அடைவார் .  அவருடைய   பெருமை   உலகம்   அறிய   செய்ய   எம்பெருமானுக்கு   ஆவல்  உண்டாயிற்று .     அதன்   விளைவு   கலியனுடைய   செல்வம்   குறைய   ஆரம்பித்தது .     வேலை   செய்து   சம்பாதிக்கும்   நிலை .   எண்ணெய்    வாங்கி   லாபத்தில்   விற்று   தம்   கடமையை   தொடர்ந்தார் .  அதற்கும்   போட்டி   ஏற்பட்டு   அதுவும்   வருமானம்   குறைந்தது .  வேலை   செய்து   சம்பாதிக்கவும்   போட்டி   அதிகமாக   இருந்தது .  அவர்   கடைசியில்        தன்   மனைவியை    விற்று   தன்   கடமையை      தொடர   துணிந்தார் .   ஆனால்   சிவத்தொண்டரின்   மனைவியை   வாங்க   யாரும்   துணியவில்லை .  அவர்   மனமுடைந்து   போனார் .  மாலை   வந்தது .  விளக்கேற்ற      என்   செய்வது ?  வேதனை   வாட்டியது.  சட்டென்று   ஒரு   முடிவுக்கு   வந்து   தன்   ரத்தத்தில்   கொழுப்பு   உள்ளது  அதை  எடுத்து  ஊற்றலாம்     என்ற   முடிவுடன்   தன்  கையை   விட்டிக்கொள்ள   முனைந்தார் .  விட்டுவிடுவாரா  ஐயன் .  அவன்   கையை   பிடித்து   தடுத்து   ரிஷபாரூடராய்   அவருக்கு   காட்சி   கொடுத்து   அவரை   ஏற்றுக்கொண்டார் ..

No comments:

Post a Comment