Tuesday, 25 June 2019

அந்த   சமயத்தில்   ஒரு   நாள்   ஆனிலை   எனும்   சிவாலயத்தில்   குடிகொண்டிருக்கும்   ஈசனுக்கு   சாற்ற   பூக்குடலையில்   பூமாலை   தொடுத்து   எடுத்துக்கொண்டு    சிவகாமியாண்டார்   எனும்   சிவனடியார்  வந்து   கொண்டிருந்தார் .   அப்போது   பட்டத்து   யானை   அவரை   தள்ளி   பூக்குடலையை    தள்ளி   மாலையை   மிதித்து   நாசப்படுத்தியது .   கீழே   விழுந்த   சிவனடியார்   ஓலமிட்டார் .  அப்போது   அந்த   பக்கமாக   வந்த   எறிபத்தர்   எனும்   சிவத்தொண்டர்   மிக்க   சினமடைந்து   வெறியுடன்   தன்   மழுவால்    யானையையும்   அதன்   பாகனையும்    வெட்டி   சாய்த்தார் .   

No comments:

Post a Comment