அந்த சமயத்தில் ஒரு நாள் ஆனிலை எனும் சிவாலயத்தில் குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு சாற்ற பூக்குடலையில் பூமாலை தொடுத்து எடுத்துக்கொண்டு சிவகாமியாண்டார் எனும் சிவனடியார் வந்து கொண்டிருந்தார் . அப்போது பட்டத்து யானை அவரை தள்ளி பூக்குடலையை தள்ளி மாலையை மிதித்து நாசப்படுத்தியது . கீழே விழுந்த சிவனடியார் ஓலமிட்டார் . அப்போது அந்த பக்கமாக வந்த எறிபத்தர் எனும் சிவத்தொண்டர் மிக்க சினமடைந்து வெறியுடன் தன் மழுவால் யானையையும் அதன் பாகனையும் வெட்டி சாய்த்தார் .
No comments:
Post a Comment