திரை செலுத்த வந்த அதிகாரிகள் சென்ற பின் அரசர் இன்னும் திரை செலுத்தாமல் தம் ஆதிக்கத்தை எதிர்ப்போர் யாராவது . இருக்கிறார்களா என்று வினவினார் . அதற்கு அமைச்சர் அதிகன் எனும் அரசன் மலைகளுக்கு நடுவே அவன் ஊர் இருப்பதால் தன்னை வெல்ல முடியாது எனும் இறுமாப்புடன் பேசுவதாகவும் தெரிவித்தார் . அரசன் மிக்க சினமடைந்து உடனே நால்வகை சேனையுடன் சென்று அவனை தலை பணிய செய்து திரை வசூலித்து வருமாறு ஆணையிட்டார் . அவ்வாறே சேனைகள் புறப்பட்டன . பெரும் சேனையை கண்ட அதிகன் தலை மறைவாகி விட்டான் . படை வீரர்கள் கிடைத்தோர் தலைகளை சீவி ஊரை கொள்ளை அடித்து ஏராளமான திரவியங்களை கொள்ளை அடித்து கொண்டு வந்தனர் . சேனை தலைவன் தன் வெற்றியை பறை சாற்ற பண குவியலையும் தலைகள் குவியலையும் சமர்ப்பித்தான் .
No comments:
Post a Comment