Thursday, 18 July 2019

விரிதிரை   சூழ்கடல்   நாகை   அதிபத்தர்க்கு   அடியேன் |

பொன்னிநாட்டில்   சமுத்திர   கரையில்   நாகப்பட்டினம்   எனும்   நகரம் .  அவ்வூர்   சம்படவர்களின்   தலைவர்   அதிபத்தர்  என்பவர் .  அவர்   சிவபெருமான்   மீது   ஆழ்ந்த   பக்தி   உடையவர்.  தினமும்   அவருக்காக  பிடிக்கும்   மீன்களில்      மிக   சிறந்த   மீனை   சிவபெருமானுக்காக   தண்ணீரில்   விட்டு   விடுவார் .  என்றாவது   ஒரே   மீன்தான்   சிக்கியது   என்றாலும்   சிறிதும்   தயக்கமின்றி   உள்ளன்போடு   அதை   ஐயனுக்கு   அர்ப்பணிப்பார் .    ஐயன்   அவரை   சோதிக்க    எண்ணம்   கொண்டார் .  தினமும்   ஒரேயொரு   மீன்   கிடைக்கும்படி    செய்தார் .  அவர்   சிறிதும்   மனம்   கலங்காமல்  அதை   ஐயனுக்கு   சமர்ப்பித்தார் .   மற்றவர்கள்   தனக்கு   மிஞ்சி   தான்   தானம்   என்று   தடுக்க   முயற்சி   செய்தனர் .

No comments:

Post a Comment