அரசன் வெட்டுண்ட தலைகளை கண்டபோது அதில் ஜடாமுடியுடன் ஒரு தலையை கண்டதும் பேரதிர்ச்சி அடைந்தார் தான் பக்தியுடன் வணங்கி போற்றும் ஒரு சிவனடியாரை கொல்வதற்கு தானே காரணமாகி விட்டதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவேயில்லை . கண்ணீர் விட்டு கதறினார் . அவரை சமாதானம் செய்யவே முடியவில்லை . தன்னை மன்னித்துக்கொள்ள அவர் தயாராகவே இல்லை . ஈசனிடம் கதறினார் . ஒரு முடிவுக்கு வந்தவராய் சிவனடியார் தலையை ஒரு தங்க தட்டில் ஏந்தி கையில் எடுத்து கொண்டு தீ வளர்க்க செய்து அதில் புகுந்து தன்னை மாய்த்துக் கொண்டார் . அடியார் ஒருவர் இறக்க தான் காரணமானதை பொறுக்க இயலாமல் தன் உயிரை தியாகம் செய்த புகழ் சோழனின் தூய அன்பு நெறியை போற்றி எம்பெருமான் அவரை தன்னிடம் சேர்த்துக் கொண்டார் .
No comments:
Post a Comment