Monday, 8 July 2019

அரசன்   வெட்டுண்ட   தலைகளை   கண்டபோது   அதில்   ஜடாமுடியுடன்   ஒரு   தலையை   கண்டதும்    பேரதிர்ச்சி   அடைந்தார்   தான்   பக்தியுடன்       வணங்கி   போற்றும்  ஒரு       சிவனடியாரை   கொல்வதற்கு    தானே   காரணமாகி     விட்டதை   அவரால்   பொறுத்துக்   கொள்ள   முடியவேயில்லை .   கண்ணீர்   விட்டு   கதறினார் .  அவரை   சமாதானம்   செய்யவே   முடியவில்லை .   தன்னை   மன்னித்துக்கொள்ள   அவர்   தயாராகவே   இல்லை .   ஈசனிடம்   கதறினார் .   ஒரு   முடிவுக்கு   வந்தவராய்   சிவனடியார்   தலையை   ஒரு   தங்க   தட்டில்   ஏந்தி   கையில்   எடுத்து   கொண்டு   தீ   வளர்க்க   செய்து   அதில்   புகுந்து   தன்னை   மாய்த்துக்   கொண்டார் .  அடியார்   ஒருவர்   இறக்க   தான்   காரணமானதை   பொறுக்க   இயலாமல்     தன்   உயிரை   தியாகம்     செய்த   புகழ்   சோழனின்   தூய   அன்பு   நெறியை    போற்றி   எம்பெருமான்   அவரை   தன்னிடம்   சேர்த்துக்   கொண்டார் .    

No comments:

Post a Comment