Monday, 15 July 2019

மெய்யடியான்   நரசிங்க   முனியாரையர்க்கு   அடியேன் |

 திருமுனைப்பாடி   எனும்  ஊரை  நரசிங்க   முனையாராயர்   எனும்   அரசன்   ஆண்டு   வந்தான் .  அவன்   மிகச்சிறந்த   சிவபக்தன் .  சிவன்   வணங்காத   அரசர்களை   வென்று   அவர்களை   சிவத்தொண்டு   செய்ய   வைப்பான் .  சிவனடியார்களுக்கு    நிறைய   உதவிகள்   செய்வான் .  எல்லா   ஆலயங்களிலும்   நித்திய   பூஜைகள்   குறைவின்றி   நிறைவேற   சிறந்த   ஏற்பாடுகள்   செய்வான் .  எல்லா   திருவாதிரை   நாட்களிலும்   அடியார்களுக்கு   பொன்   கொடுத்து   மகிழ்வான் .   ஒரு   வருடம்   திருவாதிரை   நாளில்   வந்தவர்களில்   ஒருவன்   வேடதாரி   உண்மை   சிவ   பக்தன்   அல்லன் .   அந்த   வேடதாரி   காமம்   மிகுந்தவனாக    இருந்தான் .  இது   மற்ற   அடியார்களுக்கு   வெறுப்பளித்தது .  அவனை   ஒதுக்கி         வைத்தனர் .  அது   மன்னனுக்கு   வேதனை   அளித்தது .  அவனை   மதிக்காவிட்டாலும்    அவன்   நெற்றி   திருநீற்றிற்கும்  அவன்   அணிந்த   உடைக்கும்   தரவேண்டும்   என்று    அரசன்   விரும்பினான் .  அவனுக்கு   அதிகமாகவே    பொன்   வழங்கினான் .  வந்திருந்த   எல்லோரும்   வெட்கி   தலை   குனிந்தனர் .  தோற்றத்திற்கு   மரியாதை   கொடுத்த   அவரை   வெகுவாக   புகழ்ந்தனர் .   அரசன்   அவ்வாறே  வாழ்ந்து   சிவனடி   சேர்ந்தார் ...

No comments:

Post a Comment