Saturday, 20 July 2019

அதிபத்தரின்   இச்செய்கை   சுற்றி   உள்ளோரை   வெறுப்படைய   செய்தது ..  அவர்   சாப்பாட்டிற்கு   கூட   வழியில்லாமல்   தவிப்பது   அவர்களை   சங்கடப்படுத்தியது .  தாங்கள்   சொல்வதை   அவர்   செவிசாய்க்கவில்லை   என்ற   வருத்தம்   அவர்களுக்கு .  அவர்   மிக   ஏழ்மை   நிலைக்கு   வந்து   உண்ண   உணவின்றி   அவதிப்பட்டார் .   அப்படி   இருந்தபோது   ஒரு   நாள்   வலையில்   ஒரு   மீன்   அகப்பட்டது.  அதை   அவரிடம்   கொடுத்தனர் .  அவர்   வழக்கப்படி   அதை   கடலில்   எறிந்தார் .  ஆனால்     நவரத்தினங்கள்   புதைக்கப்பட்ட   தங்க   மீன்   வலையில்   சிக்கிக்கொண்டிருந்தது .  அதை   சம்பட வர்கள்   மகிழ்ச்சியுடன்   அவரிடம்   கொடுத்தனர் .  அவர்   இத்தகைய   அபூர்வமான   விலையுர்ந்த   பொருள்   ஐயனை   உரியது  .  தாம்   எடுத்துக்கொள்வது  தகாது   என்று   அதையும்   கடலில்   எறிந்து  விட்டார் .   அந்த   மீன்   எம்பெருமானாக   மாறி   விடை   ஏறி   உமை   அன்னையுடன்   அவருக்கு   காட்சி   அளித்து   அவரையும்   தன் தொண்டர்   குழாத்தில்   சேர்த்துக்கொண்டார் .  ஐயன்   அன்புக்கு   எல்லை   ஏது  ?    

No comments:

Post a Comment