அதிபத்தரின் இச்செய்கை சுற்றி உள்ளோரை வெறுப்படைய செய்தது .. அவர் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவிப்பது அவர்களை சங்கடப்படுத்தியது . தாங்கள் சொல்வதை அவர் செவிசாய்க்கவில்லை என்ற வருத்தம் அவர்களுக்கு . அவர் மிக ஏழ்மை நிலைக்கு வந்து உண்ண உணவின்றி அவதிப்பட்டார் . அப்படி இருந்தபோது ஒரு நாள் வலையில் ஒரு மீன் அகப்பட்டது. அதை அவரிடம் கொடுத்தனர் . அவர் வழக்கப்படி அதை கடலில் எறிந்தார் . ஆனால் நவரத்தினங்கள் புதைக்கப்பட்ட தங்க மீன் வலையில் சிக்கிக்கொண்டிருந்தது . அதை சம்பட வர்கள் மகிழ்ச்சியுடன் அவரிடம் கொடுத்தனர் . அவர் இத்தகைய அபூர்வமான விலையுர்ந்த பொருள் ஐயனை உரியது . தாம் எடுத்துக்கொள்வது தகாது என்று அதையும் கடலில் எறிந்து விட்டார் . அந்த மீன் எம்பெருமானாக மாறி விடை ஏறி உமை அன்னையுடன் அவருக்கு காட்சி அளித்து அவரையும் தன் தொண்டர் குழாத்தில் சேர்த்துக்கொண்டார் . ஐயன் அன்புக்கு எல்லை ஏது ?
No comments:
Post a Comment