Wednesday, 31 October 2018

பொற்தாளம்   பெற்ற   ஞானசம்பந்தப்பெருமான்   தாளத்துடன்   ஐயனை   பல   ஆலயங்களில்   பல   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் .  அவருக்கு   தில்லை   அம்பலக்கூத்தனை   காண   பேராவல்   உண்டாயிற்று .  தந்தையும்   அவராசையை   நிறைவேற்ற   தில்லைக்கு   புறப்பட்டார் .  கொள்ளிடம்   நதியை   கடந்து   தில்லையை   நெருங்கும்   போதே   அந்தண ப்பெருமக்கள்   செய்யும்   யாக   புகையும்   மந்திர   கோஷங்களும்   வானுயர   நின்ற   கோபுரங்களும்   அவரை   மெய்சிலிர்க்க   வைத்தது .  விழுந்து   வணங்கினார் .  அவர்   வரவை   எதிர்பார்த்து   தில்லை   மூவாயிரவர்   அவரை   வரவேற்க   மேளதாளத்துடனும்   வேத   கோஷங்களுடனும்   காத்திருந்தனர் .  அவரை  உள்ளே  அழைத்து       சென்றனர் .  சம்பந்தர்     பொன்னம்பல வாணனை   மனம்   குளிர   சேவித்து   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் .  மனநிறைவோடு   வெளியே   வந்து   அவருக்கு   சேவை   செய்யும்   பேறு  பெற்ற   மூவாயிரவர்  வாழும்    வீதிகளை   வணங்கி   வலம்   வந்தார் 

No comments:

Post a Comment