சின்னஞ்சிறு பாலகன் செந்தமிழில் ஐயன் மீது பதிகம் பாடும் அதிசயம் கண்ட ஓங்கிய சிவபாதவிருதயர் கை அப்படியே நின்றது . பிரமபுரம் ஈசனே பால் ஊட்டியது என காண்பித்து விட்டு கோயில் வாயிலை சேவித்துவிட்டு ஞானபாலுண்ட அச்சின்னஞ்சிறிய பாலகன் தோணியப்பர் சன்னதிக்கு சென்று வணங்கி பாடலை தொடர்ந்தான் . ஆனந்தமும் அதிசயமும் மேலிட தந்தையார் மெய்சிலிர்த்து போனார் . அவருக்கு அத்தெய்வ குழந்தையால் சைவம் தழைக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியது . மகிழ்ச்சி தாளவில்லை . அதற்குள் பச்சிளம் பாலகன் ஈசன் அருள் பெற்று செந்தமிழ் பதிகங்கள் ஐயன் மீது பாடும் அதிசயம் ஊரெல்லாம் பரவி மக்கள் கூட்டம் கோவிலை நோக்கி வர தொடங்கியது .
No comments:
Post a Comment