Thursday, 11 October 2018

குலம்   விளங்க   பிறந்த   அத்தெய்வீக   குழந்தை      பெற்றோரை   மகிழ்ச்சி   வெள்ளத்தில்  ஆழ்த்தியது .  சிவபாதவிருதயர்   குழந்தை   பிறந்த   இவ்வைபவத்தை   கொண்டாட   வேதியர்களை    அழைத்து   பலவிதமான   தானங்களை   செய்து   அவர்களை   மகிழ்வித்தார் .தகுந்த   நாள்   வந்ததும்   ஊர்   பெண்கள்   கூடி   குழந்தைக்கு   ஆளுடை பிள்ளை   என்று   பெயர்   சூட்டி   மகிழ்ந்தனர் .  அவருக்கு  ஊரில்   நல்ல   மரியாதை   இருந்ததால்   ஊரே   ஆனந்தம்   அடைந்தது .  ஊரில்   எல்லோருமே   அக்குழந்தையை   வளர்ப்பதில்   பங்கேற்றனர் .  இவ்வாறாக   மூன்று   ஆண்டுகள்   ஓடின.   கால்   சலங்கை   ஒலிக்க    குழந்தை   ஓடும்   அழகு   யாவர்   மனதையும்   கொள்ளை   கொண்டது .  அப்போது   ஒரு   நாள்   சிவபாதவருதயர்   நீராட   திருக்குளத்திற்கு   கிளம்பினார் .  குழந்தை   தானும்  உடன்   வரவேண்டுமென்று   அடம்   பிடித்தான் .     தந்தையும்    போகட்டுமென்று   அழைத்து   செல்ல   தூக்கிக்கொண்டு   கிளம்பினார் .

No comments:

Post a Comment