Thursday, 25 October 2018

மூன்று    வயது   சின்னஞ் சிறு   பாலகன்   ஐய்யன்   மீது   பைந்தமிழில்   பதிகங்கள்   பாடும்   அதிசயம்   விரைவில்   ஊரெங்கும்   பரவியது .  அந்தணர்களும்    ஈசன்   அடியார்களும்   கூட்டம்   கூட்டமாக   வந்து   அத்திருமகன்   காலில்   விழுந்து   வணங்கினர் .  தந்தையின்   பெருமித்திற்கு   அளவே   இல்லை .  இறைவன்  கையால்    ஞான   பாலுண்டு   பேறுபெற்ற   அவன்  இறைவன்  சம்பந்தத்தால்    ஞானசம்பந்தன்   ஆனான் .  சிபாதவிருதயர்   குழந்தையை   பெருமையுடன்   தோளில்   சுமந்து   கொண்டு   நான்கு   வீதிகளிலும்   ஊர்வலமாக   வந்தார் .    மறுநாள்   பொழுது   புலர்ந்ததும்   சிறுவன்   ஈசனை   காண   ஆவல்   தெரிவிக்க   தந்தை   கோவிலுக்கு   அழைத்து   சென்றார் .   மறுநாள்   சிறுவன்   அருகே   உள்ள   கோலக்கா   சென்று   அங்கு   எம்பெருமானை   பாட   ஆவல்   தெரிவித்தான் .  தந்தை   அங்கு  தூக்கி   சென்றார் .  சம்பந்தன்   ஐயனை   துதித்து   மனமுருக   பதிகங்கள்   பாடினான் .  மனம்   குளிர்ந்த   ஈசன்   சம்பந்தனுக்கு   பொற் த்தாளம்   வழங்கினார் .       அன்னை   அதற்கு   ஓசை   கொடுத்தாள் . 

No comments:

Post a Comment