மூன்று வயது சின்னஞ் சிறு பாலகன் ஐய்யன் மீது பைந்தமிழில் பதிகங்கள் பாடும் அதிசயம் விரைவில் ஊரெங்கும் பரவியது . அந்தணர்களும் ஈசன் அடியார்களும் கூட்டம் கூட்டமாக வந்து அத்திருமகன் காலில் விழுந்து வணங்கினர் . தந்தையின் பெருமித்திற்கு அளவே இல்லை . இறைவன் கையால் ஞான பாலுண்டு பேறுபெற்ற அவன் இறைவன் சம்பந்தத்தால் ஞானசம்பந்தன் ஆனான் . சிபாதவிருதயர் குழந்தையை பெருமையுடன் தோளில் சுமந்து கொண்டு நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக வந்தார் . மறுநாள் பொழுது புலர்ந்ததும் சிறுவன் ஈசனை காண ஆவல் தெரிவிக்க தந்தை கோவிலுக்கு அழைத்து சென்றார் . மறுநாள் சிறுவன் அருகே உள்ள கோலக்கா சென்று அங்கு எம்பெருமானை பாட ஆவல் தெரிவித்தான் . தந்தை அங்கு தூக்கி சென்றார் . சம்பந்தன் ஐயனை துதித்து மனமுருக பதிகங்கள் பாடினான் . மனம் குளிர்ந்த ஈசன் சம்பந்தனுக்கு பொற் த்தாளம் வழங்கினார் . அன்னை அதற்கு ஓசை கொடுத்தாள் .
No comments:
Post a Comment