Tuesday, 16 October 2018

சிவபாதவிருதயர்   குழந்தையை   தூக்கிக்கொண்டு   கோவிலுக்கு   சென்றார்   .  குளத்தில்   நீராட   எண்ணி   குழந்தையை   குளக்கரையில்   படியில்   உட்கார   வைத்துவிட்டு    அவர்   மூழ்கி   குளிக்க   எண்ணி குளத்தில்    இறங்கினார் .  குழந்தை   அவர்   குளிப்பதை   கண்டு   சிரித்து   கொண்டு   வேடிக்கை   பார்த்தது .  அவர்   தண்ணீரில்   அமிழ்ந்து   குளிக்க   எண்ணி   தண்ணீரில்   மூழ்கினார் .  குழந்தை   தந்தையை   காணாமல்   பயந்து   அழ   தொடங்கியது .    எங்கும்   தேடியும்   தந்தையை   காணாமல்   ஆலய   விமானத்தை   நோக்கி   அம்மா   அப்பா   என்று   அழ   தொடங்கினான் .   குழந்தையின்   அழுகை   தோணியப்பர்   செவிகளில்   விழுந்தது .   தன்   பேரருளால்   சிவபாதவிருதையருக்கு   கிடைத்த   பொக்கிஷம்   அல்லவா   அக்குழந்தை .  அது   அழுதால்   பொறுப்பாரா ?  உடனே   உமை   அன்னையுடன்   தோன்றி   அன்னையை     குழந்தை    ஞானமுடன்   பிறக்க   தவமிருந்த   பெற்றோர்   மனம்   குளிர   பாலுடன்   ஞானத்தையும்   கலந்து  ஊட்டி  விடும்படி    பணித்தார் .

No comments:

Post a Comment