Saturday, 27 October 2018

ஈசனிடம்   பொ ற்த்தாளம்   பெற்று   அன்னை   அருளால்   அதில்   லய   ஓசை   வரப்பெற்றதும்   சம்பந்தரின்   பெருமையை   மேலும்   உயர்த்தியது .  அவனுடைய   தாய்வழி   பாட்டனாரின்   ஊரான   நனிப்பள்ளி   மக்கள்   அவரை   தங்கள்   ஊருக்கு   வரவழைக்க   மிக   ஆவல்   கொண்டனர் .  தந்தையும்   அவனை   அங்கு   அழைத்து   சென்றார் .  ஊர்   மக்கள்   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தனர் .  மேலும்   சுற்றி   உள்ள   திருத்தலங்களை   சேவித்துக்கொண்டு   ஊர்   திரும்பினர் ,  இவரை  பற்றி    கேள்விப்பட்ட     நீலகண்ட   யாழ்ப்பாணரும்   அவர்   மனைவி   விறலியாரும்   அவரை   காணும்   பேராவலுடன்   தோணிபுரம்   வந்தனர் .  அவர்கள்   வருகையை   கேள்விப்பட்ட   சம்பந்தப்பெருமான்   தானே   சென்று   அவரை   வரவேற்று   அழைத்து   கொண்டுவந்து   அமுது   படைத்து   மகிழ்ந்தார் .  அவரை   யாழ்   வாசிக்க   செய்து   ஐயன்   பதிகங்களை   யாழில்   கேட்டு   பெரிதும் ரசித்தார் . விடை   பெறும்போது     நீலகண்டர்   தன்   மனதிலுள்ள   பேராவலை   தெரிவித்தார்.  ஆளுடைபிள்ளை   எம்பெருமானை   பாடும்போது   தான்   கூடவே   இருந்து   யாழ்  வாசிக்க   அனுமதிக்க   வேண்டுமென   கேட்டுக்கொண்டார்   ஞானசம்பந்தரும்   மகிழ்ச்சியுடன்  ஒப்புதல்    அளித்தார் .    

No comments:

Post a Comment