சிவபாதவிருதயர் பெயருக்கு ஏற்ற வாறு சிவபெருமானின் பாதத்தை ஒரு கணமும் மறவாது த்யானிப்பவர் . அவர் மனைவியார் பகவதியாரும் கணவ.னுக்கு சிறிதும் குறையாமல் எம்பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டவர் . கணவனுடைய தெய்வீக பணிகளில் மிக்க ஆர்வத்துடன் பங்கு கொண்டு துணை இருந்தார் . இவ்வாறு மனமொத்து வாழ்ந்த தம்பதிகளுக்கு குறை இருந்தது . அவர்களுக்கு மழலை செல்வம் இல்லாதது குறை . அப்போது நாட்டில் புற சமயங்கள் பரவி இருந்தது . தம் மக்கள் புற சமயங்களுக்கு மாறுவதை பொறுக்காமல் தினம் தோணியப்பர் முன் சரணடைந்து தன் குறைகளை அவரிடம் கண்ணீர்மல்க முறையிட்டு வந்தார் . கருணை கடலான ஐயன் பக்தனின் கண்களில் நீர் வருவதை பொறுப்பாரா ? ஐயன் கண் திறந்தார். பகவதியார் கருவுற்று பத்து மாதங்களில் சுப யோகங்கள் நிறைந்த திருவாதிரை நக்ஷத்திரத்தில ஒரு ஆண் மகனை ஈன்றாள் .
No comments:
Post a Comment