Monday, 6 April 2015

sangiliyar

இப்போது  சுந்தரர்  கைலையில்  அவர்  கண்டு  மையல்  கொண்ட  இரண்டாவது  மங்கையை  மணந்த  சம்பவத்தை  நோக்குவோம் .
சுந்தரர்  பல  கிராமங்களில்  உள்ள  கோயில்களை  அடைந்து  ஈசனை  மனமுருகி  பாடிக்கொண்டு  செல்கிறார் . அவ்வாறு  யாத்திரை  செய்துகொண்டு  திருஒற்றியூரை  அடைகிறார் .  அவர் கைலையில்  மனம்  பறிகொடுத்த  மங்கை  அங்கு  ஈசனுக்கு  மலர்  கைங்கர்யம்  செய்துகொண்டு  ஈசனிடம்  மிக்க  பற்று கொண்டவளாக  வாழ்ந்து  கொண்டிருந்தாள் . சுந்தரர்  அவளை  கண்ட  உடனேயே  அவளிடம்  மனம்  பறிகொடுக்கிறார் . ஈசனிடம்  விண்ணப்பிக்கிறார் . 

No comments:

Post a Comment