Tuesday, 28 April 2015

paravaiyar2

சுந்தரரும்  பரவைநாச்சியாரும்  சிறிது  காலம்  திருவாரூரில்  வாழ்கின்றனர் . சுந்தரரும்  பல  திருத்தலங்களை  சேவித்து  பல  பதிகங்கள்  பாடி  ஈசனை  துதித்தவாறு  இருந்தார் . அந்த  காலத்தில்  அவருக்கு  சேரநாட்டில்  ஒரு சிற்றாறரசரான  சேரமான்  பெருமானாரின்  நட்பு  கிடைக்கிறது .
சேர மான்   பெருமானார்  வெகு  சிறந்த  சிவபக்தர் .கேட்பாருக்கு  யாராயினும்  எதுவாயினும்  இல்லை  எனாது  வழங்கும்  பண்பாளர் . தில்லை  அம்பலவாணரிடம்  அளவு  கடந்த  பக்தி  உடையவர் . இதனால்  தினமும்  இவர்  பூஜை  முடிந்ததும்  தில்லை  நடராஜரின்  சலங்கை  ஓசை  அவருக்கு  கேட்குமாம் . அத்தகைய  பேறு  பெற்றவர் .
  

No comments:

Post a Comment