Saturday, 18 April 2015

cont2

கண்  பார்வை  இழந்தாலும்  திருவாரூர்  ஈசனை  காணும்  ஆவல்  குறை யாதவராய் அடியார்களுடன்   பல  சிவதலங்களை  சே வித்தவாறே  யாத்திரை  தொடங்குகிறார் .கடைசியாக  காஞ்சி  வந்தடைகிறார் . காமாக்ஷி  அன்னையை  மனமுருக  வேண்டிக்கொண்டு   ஏகாம்பரேஸ்வரர்  முன்  மண்டியிட்டு  ஈசனை காணும்  பாக்கியம்  பெற  கண்ணொளி  வேண்டுகிறா ர் ..ஈசன்  பெரும்  கருணையால்  ஒரு  கண்ணில்  ஒளி  பெறுகிறார் . நன்றி  பெருக்குடன்  அவரை  வாயார  பாடி  துதிக்கிறார் . பிறகு  பயணத்தை . தொடர்கிறார் .   கடைசியாக  திருவாரூர்  வந்தடைகிறார் . பலகாலம்  பிரிந்த  நண்பனை  காணும்   மனம்  எத்தனை  ஆனந்தம்  அடையுமோ  அத்தனை  ஆனந்தத்துடன்  அவரை  தரிசிக்க  வருகிறார் . அவரை  உரிமையுடன்  (மற்றை  கண்தான்  தாராது  ஒழிந்தால்  வாழ்ந்து  போதீரே !) என்று  பாடுகிறார் .ஈசன்  பிரிய  நண்பனை  கைவிடுவாரா ? உடனே  மற்றைய  கண்   ஒளியையும்  பெறுகிறார் .

No comments:

Post a Comment