காழிப்பிள்ளை சென்ற இடமெல்லாம் மக்கள் அவரை குதூகலத்துடனும் பூர்ண கும்பத்துடனும் வரவேற்று பக்தியுடன் வணங்கி துதித்தனர் . திருப்பாச்சிலாச்சிராமம் வந்து சேர்ந்தார் சம்பந்தர். அவ்வூர் அரசன் கொல்லிமுழவன் அவன் அருமை மகள் முயலகன் என்னும் கொடு நோயால் பிடிக்கப்பட்டிருந்தாள் . அவள் தன் நினைவின்றி இழுத்துக்கொண்டு படுத்திருந்தாள் . பார்க்க பரிதாபமான நிலையில் இருந்தாள் . அரசன் எத்தனையோ வைத்தியங்கள் பார்த்தும் பலனில்லை . எந்த வைத்தியருக்கும் எதுவும் புலப்படவில்லை . மன்னரும் அவர் மனைவியும் மிக்க துன்பம் அடைந்திருந்தனர் . மன்னர் விரக்தி அடைந்து இனி மனித யத்தனம் வீண் என்று முடிவு செய்து ஈசனை சரணடைந்தார் . பெண்ணை சுமந்து கொண்டு கோயிலை அடைந்து ஈசன் காலடியில் அவளை கிடத்தினார் .
No comments:
Post a Comment