Friday, 30 November 2018

காழிப்பிள்ளை   சென்ற   இடமெல்லாம்      மக்கள்   அவரை   குதூகலத்துடனும்   பூர்ண   கும்பத்துடனும்   வரவேற்று   பக்தியுடன்   வணங்கி   துதித்தனர் .    திருப்பாச்சிலாச்சிராமம்     வந்து   சேர்ந்தார்   சம்பந்தர்.   அவ்வூர்   அரசன்  கொல்லிமுழவன்    அவன்   அருமை   மகள்  முயலகன்   என்னும்   கொடு   நோயால்   பிடிக்கப்பட்டிருந்தாள் .  அவள்   தன்   நினைவின்றி   இழுத்துக்கொண்டு   படுத்திருந்தாள் .    பார்க்க   பரிதாபமான   நிலையில்   இருந்தாள் .   அரசன்   எத்தனையோ   வைத்தியங்கள்   பார்த்தும்   பலனில்லை .  எந்த   வைத்தியருக்கும்   எதுவும்   புலப்படவில்லை .  மன்னரும்   அவர்   மனைவியும்   மிக்க   துன்பம்   அடைந்திருந்தனர் .    மன்னர்   விரக்தி   அடைந்து   இனி   மனித   யத்தனம்   வீண்    என்று   முடிவு   செய்து   ஈசனை     சரணடைந்தார் .  பெண்ணை   சுமந்து   கொண்டு   கோயிலை   அடைந்து   ஈசன்    காலடியில்   அவளை  கிடத்தினார் .

No comments:

Post a Comment