Wednesday, 7 November 2018

நீலகண்ட   யாழ்ப்பாணர்   சம்பந்தரை  தம்    ஊரான  எருக்கத்தம்புலியூர்   அழைத்து   சென்று   அவரை   அன்போடு   உபசரித்து   சுற்றியள்ள   எல்லா   திருத்தலங்களையும்   சேவிக்க   செய்தார் .   அவர்   பாடும்   பதிகங்கங்களுக்கு     கூட  யாழ்    வாசித்து   மகிழ்ந்தார் .   நெல்வாயில்   அரத்துறை   நாதரை     தரிசித்துகொள்ள   புறப்பட்டனர் .   அதுநாள்   வரை   தந்தையின்   தோளில்   சுமக்கச்செய்து   வந்து    கொண்டிருந்த    சம்பந்தர்   இனியும்   அவர்க்கு   சிரமம்  கொடுக்க     விரும்பாமல்     நடந்து   பயணம்   தொடர   விரும்பினார் .    நெல்வாயில்   அரத்துறை     செல்லும்   வழியில்   மாறன்பாடி   எனும்   இடம்   நெருங்கும்போது   சோர்ந்து   போய்     மேலும்   தொடர   முடியாமல்   அங்கு   தங்க   முடிவெடுத்தனர் .     எதிர்பாராமல்   அவ்வூர்   மக்களுக்கு   அவர்   தரிசனம்   கிடைக்க   மகிழ்ச்சி   பொங்க   அவரை   வரவேர்த்தனர் .   அரைத்துறைநாதர்   தன்   மகன்   இவ்வாறு   துன்ப   படுவதை    காண   பொறுக்காமல்   அவருக்கு   முத்து   சிவிகையும்    குடையும்   கொடுக்க   இச்சை   கொண்டார் .

No comments:

Post a Comment