இவ்வாறு இருக்கையில் சிவபாதவிருதயர்க்கு தன் மகனுக்கு உபநயனம் செய்து பார்க்க ஆவல் உண்டாயிற்று . அந்தணர்களை வரவழைத்து சுப முகூர்த்தம் நிர்ணயித்தார் . குறிப்பிட்ட நாளில் அந்தணர்கள் வந்து பிரம்மோபதேசம் நடந்தேறியது . தந்தைக்கு பேரானந்த ம் . குழந்தைக்கு வேதம் முறைப்படி உபதேசிக்க அந்தணர்கள் முற்பட்டபோது ஈசனும் அன்னையும் சேர்ந்து கொடுத்த ஞானபாலுண்ட அப்பெருமகனார்க்கு தாங்கள் கற்றுத்தர ஏதுமில்லை என்று உணர்ந்த அந்தணர்கள் அவரிடம் உபதேசம் பெற எண்ணினர் . அவரும் பஞ்சாக்ஷரத்திற்கு மிஞ்சிய வேறு மந்திரமில்லை என்று வலியுறுத்தி சொல்லி 'துஞ்சலும் துஞ்சல் ' எனும் பதிகம் பாடி அவர்களை மெய்மறக்க செய்தார் . அந்தணர்கள் மன மகிழ்ச்சியோடு அவரை தொழுது சென்றனர் .
No comments:
Post a Comment