Tuesday, 27 November 2018

பிரம்மோபதேசம்   முடிந்த   பிறகு   ஆளுடைப்பிள்ளைக்கு   காவிரி   இரு   கரைகளிலும்   உள்ள   திவ்ய   க்ஷேத்திரங்களை     சேவிக்கும்   ஆவல்   எழுந்தது .  அதை   தந்தையிடம்     தெரிவித்தபோது   அவரும்   சேர்ந்து   கொண்டு   புறப்பட்டார் .  இந்திரன்   அகலிகையிடம்    தவறாக   நடந்த   காரணத்தால்   அடைந்த   சாபத்தை   நீக்கி    ஆயிரம்   கண்கள்   வழங்கிய   கண்ணாயிரேஸ்வரர்   கோவிலை   சேவித்து   கொண்டு   புள்ளிருக்குவேளூர்   திருப்புன்கூர்   மற்றும்   பல   பல   ஆலயங்களை   தரிசித்து   கொண்டு   பதிகங்களை   பாடிக்கொண்டும்   மனம்   மகிழ்ந்து   பயணத்தை   தொடர்ந்தனர் .   கடைசியாக   திருப்பாச்சிலாச்சிராமம்   வந்தடைந்தனர்  . 

No comments:

Post a Comment