பிரம்மோபதேசம் முடிந்த பிறகு ஆளுடைப்பிள்ளைக்கு காவிரி இரு கரைகளிலும் உள்ள திவ்ய க்ஷேத்திரங்களை சேவிக்கும் ஆவல் எழுந்தது . அதை தந்தையிடம் தெரிவித்தபோது அவரும் சேர்ந்து கொண்டு புறப்பட்டார் . இந்திரன் அகலிகையிடம் தவறாக நடந்த காரணத்தால் அடைந்த சாபத்தை நீக்கி ஆயிரம் கண்கள் வழங்கிய கண்ணாயிரேஸ்வரர் கோவிலை சேவித்து கொண்டு புள்ளிருக்குவேளூர் திருப்புன்கூர் மற்றும் பல பல ஆலயங்களை தரிசித்து கொண்டு பதிகங்களை பாடிக்கொண்டும் மனம் மகிழ்ந்து பயணத்தை தொடர்ந்தனர் . கடைசியாக திருப்பாச்சிலாச்சிராமம் வந்தடைந்தனர் .
No comments:
Post a Comment