Saturday, 10 November 2018

அரத்துறைநாதர்   இரவு   அந்தணர்கள்   கனவில்   தோன்றி   புதல்வன்   சம்பந்தன்   தன்   பிஞ்சு   கால்கள்   நோக   தன்னை  காண  நடந்து   வரப்போவதாகவும்        அவன்   பிஞ்சு   கால்கள்   நோவதை   தாம்   காண   இயலாது .  ஆகையால்   அவருக்கு   முத்து   பல்லக்கும்   குடையும்   சின்னங்களும்   அளிக்க   விரும்புவதாகவும்     அவைகளை   மாறன்பாடி   சென்று   சம்பந்தனை   அப்பல்லக்கில்   அழைத்து   வருமாறு   ஆணையிட்டு   மறைந்தார் .  விடிந்ததும்   அந்தணர்கள்   கோவிலை   அடை ந்தனர்.    கோவிலில்   முத்து   சிவிகையும்   குடையும்   மற்ற   சின்னங்களும்   அங்கு   தயாராக       இருக்க   கண்டு   ஆச்சர்யம்   அடைந்தனர் .   அவைகளை   எடுத்துக்கொண்டு    யாவரும்   மாறன்பாடி   அடைந்தனர் .   ஈசன்   கருணையை  நினைத்து   தந்தையும்   மகனும்      எண்ணி   வியந்து   மெய்சிலிர்த்தனர் .  சம்பந்தர்   பல்லக்கை   வலம்   வந்து   வணங்கி   அதில்   ஏறினார் .   அடியார்கள்   சிவிகையை   தாங்கி னர் .    ஒருவர்  குடை   பிடித்தார்    மறறொருவர்   சின்னங்களை   தாங்கி   முன்னால்   சென்றார் .  இவ்வாறு   நெல்வாயிலரத்துறையை  அடைந்தனர் .

No comments:

Post a Comment