அங்கிருந்து கிளம்பி பல தலங்களிலும் ஐயனை வணங்கி பதிகங்கள் பாடி மகிழ்ந்து திருசேய்நால்லூர் வந்தார் . சிவ அபராதம் செய்தவர் தந்தை என்றும் பாராமல் காலை வெட்டி மாய்த்து தண்டித்து அதன் காரணமாக ஐயன் இவரை மகனாக ஏற்று சண்டேஸ்வர பதவி அளித்து தந்தைக்கும் சிவபதம் அளித்த எம்பெருமானை வணங்கி துதித்து சீர்காழி வந்து சேர்ந்தார் . இத்தனை பெருமை பெற்று திரும்பி வந்த ஞான குழந்தையை மக்கள் எத்தனை பெருமையுடன் வரவேற்றிருப்பார்கள் என்று சொல்ல தேவை இல்லை . ஊர் எல்லையிலேயே மக்கள் மேளதாளத்துடனும் பூர்ண கும்பத்துடனும் பெண்கள் விளக்கு ஆரத்தியுடனும் அவர் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர் . ஆளுடைப்பிள்ளை மக்கள் அன்பை கண்டு நெகிழ்ந்து போனார் .
No comments:
Post a Comment