மகளை ஐயன் காலடியில் கிடத்திய மன்னன் காழிப்பிள்ளை அவ்வூருக்கு விஜயம் செய்யப்போகும் செய்தி அறிந்து மகளை ஈசன் காலடியில் விட்டுவிட்டு காழிப்பிள்ளையை வரவேற்கும் ஏற்பாடுகளை கவனிக்க சென்று விட்டார் . பக்திசிரத்தையுடன் அவரை வரவேற்று அழைத்து சென்றார் . ஈசன் காலடியில் பரிதாபமாக கிடக்கும் அரசகுமாரியின் பரிதாப நிலைக்கண்டு திடுக்கிட்டு மனம் கலங்கிய சம்பந்தர் மன்னனை விசாரித்தார் . துக்கத்துடன் தன்மகளின் பரிதாப நிலையை விளக்கினார் . ஒரு வைத்தியத்திற்கும் கட்டுப்ப டாத அவளுடைய பரிதாப நிலையை கேள்விப்பட்ட பிள்ளை ஈசனிடம் இவ்வாறு ஒரு அபலைப் பெண்ணை சோதிப்பது முறையா ? என்று உரிமையுடன் கேட்டு அவளுக்கு உடனே நோய் தீர்த்து நல்வாழ்வளிக்க வேண்டி ஈசனை துதித்து பாடினார் . காழிப்பிள்ளை சொல்லி ஐயன் மறுப்பாரா உடனே அப்பெண் தூக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்தாள். தாய்தந்தையர் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது ?
No comments:
Post a Comment