Monday, 3 December 2018

மகளை   ஐயன்   காலடியில்   கிடத்திய   மன்னன்   காழிப்பிள்ளை   அவ்வூருக்கு   விஜயம்   செய்யப்போகும்    செய்தி   அறிந்து   மகளை   ஈசன்   காலடியில்   விட்டுவிட்டு   காழிப்பிள்ளையை      வரவேற்கும்   ஏற்பாடுகளை   கவனிக்க   சென்று  விட்டார் .  பக்திசிரத்தையுடன்   அவரை   வரவேற்று   அழைத்து   சென்றார் .  ஈசன்   காலடியில்   பரிதாபமாக   கிடக்கும்  அரசகுமாரியின்    பரிதாப   நிலைக்கண்டு   திடுக்கிட்டு   மனம்   கலங்கிய   சம்பந்தர்   மன்னனை   விசாரித்தார் .  துக்கத்துடன்      தன்மகளின்   பரிதாப   நிலையை   விளக்கினார் .   ஒரு  வைத்தியத்திற்கும்    கட்டுப்ப டாத   அவளுடைய   பரிதாப   நிலையை   கேள்விப்பட்ட   பிள்ளை    ஈசனிடம்   இவ்வாறு   ஒரு   அபலைப்    பெண்ணை   சோதிப்பது   முறையா ?  என்று   உரிமையுடன்   கேட்டு   அவளுக்கு   உடனே   நோய்   தீர்த்து    நல்வாழ்வளிக்க    வேண்டி   ஈசனை   துதித்து    பாடினார் .   காழிப்பிள்ளை   சொல்லி   ஐயன்   மறுப்பாரா   உடனே   அப்பெண்   தூக்கத்திலிருந்து   எழுவது  போல்   எழுந்தாள்.  தாய்தந்தையர்       மகிழ்ச்சிக்கு   எல்லை    ஏது ?

No comments:

Post a Comment