Thursday, 15 November 2018

அரைத்துறைநாதரை   கண்குளிர   தரிசித்து  தன்னையும்   ஒரு   பொருட்டாக   மதித்து   தன்மீது   இத்துணை   கருணை   கொண்டு  சிவிகை   குடை   மற்ற   பொருள்களை   அளித்த   பெருமானை   நெஞ்சார   பாராட்டி   பதிகங்களை   பாடி   மகிழ்ந்தார்  சம்பந்தர் .    நன்றி   பெருக்கால்   அங்கு   சிலகாலம்   தங்கி   கண்குளிர  சேவித்தார் .   அவருக்கு   ஞானப்பால்   கொடுத்து   பெற்றோர்  ஸ்தானத்தில்  தான்   வணங்கும்   தோணியப்பர்   நினைவு   வாட்டியது   . அரத்துறை நாதரிடம்   விடை   பெற்று   கொண்டு   கிளம்பினார் .வழியிலுள்ள   ஊர்களில்   மக்கள்   இத்தனை   சலுகைகள்   ஈசனிடமிருந்து   பெற்ற    அந்த ஞானக்குழந்தையை   தரிசித்து   வணங்க   ஆலயங்களில்   திரண்டனர் .    சிவிகையை   வலம்வந்து   அவரை   வணங்கினர் .   அவர்கள்   அன்பில்   நெகிழ்ந்து   போனார்    சம்பந்தர் .

No comments:

Post a Comment