Wednesday, 7 December 2016

அய்யன்  உமை  அன்னையுடன்  வாசம்  செய்யும்  கைலையின்  பெருமை  சொல்வதற்கு  அரியது .தேவர்கள்  பூதகணங்கள்  கீதம்  இசைக்க  மஹாவிஷ்ணு . ப்ரம்மா  மற்ற  தேவாதி தேவர்கள்  வேதங்களால்  தோத்திரம்  செய்ய ஈசன் இடப்பாகத்தில்  அன்னையுடன்  வீற்றிருக்கும்  காட்சி  விவரிக்க  ஒண்ணாதது . கைலை  மலையின்  அடிவாரத்தில்  பல  முனிவர்கள்  தவம்  செய்கின்றனர் . அவர்களில்  உபமன்யு  முனிவர்  மிக  பெருமை  வாய்ந்தவர்  சிறந்த  சிவ பக்தர் .கிருஷ்ண  பரமாத்மாவே  அவரிடம்  தீக்ஷை  பெற்றார்  என்றால்  அவர்  பெருமைக்கு  நிகர்  ஏது ?
     அவர்கள் ஒரு  நாள்  பூஜை  முடிந்து  உபமன்யு  முனிவரிடம்   அறிவுரை  கேட்டுக்கொண்டு  இருந்த  பொழுது  ஒரு  பேரொளி  ஆகாயத்தில்   தோன்றி  கைலை  நோக்கி  சென்று  மறைந்தது .

No comments:

Post a Comment