Thursday, 22 December 2016

மனுநீதி  சோழன்  கதை யாவரும்   அறிந்ததே . தன்  மகன்  வீதி  விடங்கன்  தேரில்   சென்ற  போது    இளம் கன்று  ஒன்று  வேகமாக  ஓடிவந்து  தேரின்  சக்கரத்தில்  அடிபட்டு  மாண்டு  போனது .விதிவிடங்கன்  அதிர்ந்து  போய்  பெரும்  வேதனைக்க்கு  உள்ளானான் . தாய்  பசு  கண்ணீர்  மல்க  மன்னன்  அரண்மனை  முன்னே  உள்ள  ஆராய்ச்சி மணியை  அடித்தது . மன்னனும்  மனம்   கலங்கி  பசுவுக்கு   தக்க  நீதி  வழங்க  தன்  மகனை  வீதியில்  படுக்கவைத்து  அவன்  மீது  தேரை  ஓட்டி  கொல்லுமாறு  ஆணை  இடுகிறான் . அப்போது  அந்த  அதிசயம்  நிகழ்கிறது . தர்மதேவதையே  அக்கன்றாக  வந்து  அரசனின்  பெருமையை  உலகம் உணர இந்நாடகம்  நடத்தியதாக  அசரீரி வாக்கால்  அறிந்து  யாவரும்  பெரும்  மகிழ்ச்சி  அடைந்தனர் . இவ்வாறு  பெருமை  மிக்க  வரலாறு  படைத்தது  திருவாரூர்  என்று    உபமன்யு  கூறுகிறார் . சுந்தரர்  ஆரூர்  ஈசனிடம்  அளவு  கடந்த  பிரேமை  கொண்டிருந்தார் . கைலாய  பெண்ணான  கமலினியும்  அங்கே  பறவை  நாச்சியாராக  பிறக்கிறார் 

No comments:

Post a Comment