Monday, 19 December 2016

மேலும்  முனிவர்  கூறுகிறார் , சிவபார்வதி  திருமணத்தின்  போது  இமயத்தில்  எல்லோரும்  கூடிவிட  வடபாகம்  தாழ்ந்து தென்பாகம்  உயர, உலகம்  சமநிலை  பெற  ஈசன்  அகத்திய  முனிவரை  தென்  பக்கத்திற்கு  அனுப்பி  அங்கேயே  அவருக்கு  தன்  திருமண  கோலத்தை  காண்பிப்பதாக  வாக்களிக்கிறார் . கங்கை  நீரை  கமண்டலத்தில்  ஏந்திக்கொண்டு  தென்  திசையில்  பொதிகை  மலையில்  அகத்தியர்  தவமிருக்கிறார் .தென்பகுதி  தாரகாசுரன்  அட்டூழியத்தால்  வளமிழந்து  இருந்தது . விநாயக  பெருமா  கமண்டலத்தில்  இருந்த  கங்கை  நீரை கவிழ்த்து காவிரியாக  ஓடவைத்து  செழுமையான  பகுதியாக  மாற்றுகிறார் . காவிரி  பல  கிளைகளாக  பிரிந்து  தென்  பகுதி  முழுமையும்  செழிப்பாக்குகிறது . பல  புண்ணிய  க்ஷேத்திரங்கள்  உண்டாயின . அதில்  திருவாரூர்  முக்கியமானதலம் .அங்கு  அரசாண்ட  மனுநீதி  சோழன்  நீதிக்கு  ஒரு  எடுத்துக்காட்டாக  வாழ்ந்தவன் .

No comments:

Post a Comment