Friday, 2 December 2016

தொண்டர்  பெருமை  விளக்க  இப்பாடலை  காண்போம் . முருக  பெருமான்  அவ்வை  பிராட்டியிடம்  சில  வினாக்களை  தொடுக்கிறார் . பதிலை  அளிக்கும்  பிராட்டி  பெரியது எது   எனும்  வினாவிற்கு  தரும்  பதிலே  இப்பாடல் .

பெரிது  பெரிது  புவனம்  பெரிது ,  புவனமோ   நான்முகன்  படைப்பு
நான்முகனோ  திருமால்  உந்தியில்  வந்தோன், திருமாலோ  பாற்கடல்  துயின்றோன் ,
பாற்கடலோ  குறுமுனி  கைஅடக்கம் , குறுமுனியோ  கலசத்தில்  பிறந்தோன்
கலசமோ  புவியில்  சிறுமண்  காணும் , புவியோ  அரவினுக்கு  ஒருதலை  பாரம்
அரவோ  உமையவள்  சிறுவிரல்  மோதிரம் , உமையவாளோ  இறைவர்தம்  பாகத்து  ஒடுக்கம்
இறைவரோ  தொண்டர்தம்  உள்ளத்து  ஒடுக்கம்
தொண்டர்தம்  பெருமை  சொல்லவும்  பெரிதே

இப்பாடலில்  தொண்டர்  பெருமையை  அவ்வையார்  அழகாக  தெளிவாக  விளக்குகிறார் . ஈசன்  சுந்தரரை  இப்புவியில்  பிறக்க  வைத்து  அவரையும்  ஒரு  அல்லலில்  விழவைத்து  தானே  சுந்தரருக்கு  "அடியார்க்கு  அடியேன் '' என்று  அடியெடுத்து  கொடுத்து  திருத்தொண்டர்  தொகை  எனும்  அடியார்களின்  பெருமையை  உலகுக்கு  எடுத்து  உரைக்கும்  பாடலை  பாடவைக்கிறார் . ஆக ஐயனே  தான்  தம்  அடியார்களின்  உள்ளத்தில்  வாழ்வதாக  உணர்த்துகிறார் . அத்தகைய  அடியார்களின்  பெருமையை  மிகுந்த  தாழ்மையுடனும்  அளவிலா  பக்தியுடனும்  சேக்கிழார்  பாடும்  இந்நூலை  'பெரிய  புராணம் ' என்று  போற்றுவது  பொருத்தமே . 

No comments:

Post a Comment