ஒருநாள் சிவபெருமான் தேவர்களின் இச்சைப்படி தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டார் . தேவர்கள் அவ்வழகை கண்டு அதிசயித்து பரவசமடைந்தனர் .ஈசன் மகிழ்ந்து கண்ணாடி முன் நின்று அதில் தெரியும் தம் பிரதி பிம்பத்தை சுந்தரா வா என்றழைத்தார் . அவரும் வந்ததும் அவரை தேவர்கள் வாழ்த்தி வணங்கினர் .சுந்தரரும் ஈசனின் திருநீறு பாத்திரம் ஏந்தி அவருடன் இணை பிரியாது இருந்து வந்தார் . ஈசன் கட்டளைக்கு இணங்கி ஆலகால விஷத்தை ஏந்தி வந்து ஆலால சுந்தரர் என்று அழைக்கப்பட்டார் . இதை சுந்தரர் வரலாற்றில் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம் . இவர் ஒரு நாள் ஈசனுக்கு மலர் கொய்ய செல்லும்போது அன்னையின் தோழியர் இருவரை கண்டு ஒரு கணம் மனம் பேதலித்து அதன் காரணமாக அம்மூவரும் இப்புவியில் பிறந்து சில காலம் கழிக்க நேரிட்டதையும் அவ்வரலாற்றிலேயே கண்டோம் .
No comments:
Post a Comment