Sunday, 11 December 2016

ஒருநாள்  சிவபெருமான்  தேவர்களின்  இச்சைப்படி  தன்னை  நன்றாக  அலங்கரித்துக்கொண்டார் . தேவர்கள்  அவ்வழகை  கண்டு  அதிசயித்து  பரவசமடைந்தனர் .ஈசன்  மகிழ்ந்து  கண்ணாடி முன்  நின்று  அதில்  தெரியும்  தம் பிரதி  பிம்பத்தை சுந்தரா   வா   என்றழைத்தார் .  அவரும்  வந்ததும்   அவரை தேவர்கள்  வாழ்த்தி  வணங்கினர் .சுந்தரரும்  ஈசனின்   திருநீறு  பாத்திரம்  ஏந்தி  அவருடன்  இணை பிரியாது  இருந்து  வந்தார் .  ஈசன்  கட்டளைக்கு  இணங்கி  ஆலகால  விஷத்தை  ஏந்தி  வந்து  ஆலால  சுந்தரர்  என்று  அழைக்கப்பட்டார் . இதை  சுந்தரர்  வரலாற்றில்  முன்பே  குறிப்பிட்டிருக்கிறோம் . இவர்  ஒரு  நாள்  ஈசனுக்கு  மலர்  கொய்ய  செல்லும்போது  அன்னையின்  தோழியர்  இருவரை  கண்டு  ஒரு  கணம்  மனம்  பேதலித்து  அதன்  காரணமாக  அம்மூவரும்  இப்புவியில்  பிறந்து  சில  காலம்  கழிக்க  நேரிட்டதையும்  அவ்வரலாற்றிலேயே  கண்டோம் .

No comments:

Post a Comment