Monday, 24 October 2016

பதினோராம்  திருமுறை  நம்பிகள் பாடல்களுடன்  முடிவடைகிறது .ஈசனின்  கைப்பட  எழுதப்பட்ட  ஒலையுடன்  துவங்குகிறது . பெருமைக்குரிய  நம்பிகள்   பாடல்களுடன்  நிறைவடைகிறது . அவருடைய  பாடல்கள்  தனி  முக்கியத்துவம்  உடையது . 63 நாயன்மார்கள்  பெருமையை  உணர்த்தி  அவர்களுடைய  புராணங்களை  உலகறிய  வைத்து  சிவாலயங்களிலும்  அவர்களின்  உருவ  சிலைகள்  கொலுவிருக்க  வகை  செய்தது . பெரிய  புராணம்  எழுதப்படவும்  காரணமாயிற்று . சுந்தரர்  இவ்வறிய  சிவத்தொண்டர்களை  ஒவ்வொரு  வரியில்  அறிமுகம்  செய்தார் . நம்பிகள்   ஒவ்வொருவர்    வரலாறையும்  சுருக்கமாக  தம்  திருத்தொண்டர்  திருவந்தாதியில்  ஒவ்வொரு  பாட்டாக  எழுதி  வைத்தார் . அதுவே  பிற்காலத்தில்   சேக்கிழாரால்  பெரிய  புராணமாக  விரிவாக  அத்தனை  நாயன்மார்களின்  வரலாறும்  நமக்கு  அளிக்கப்பட்டது . இவ்வகையில்  இத்திருமுறை  முக்கியத்துவம்  பெறுகிறது 

No comments:

Post a Comment