கதவை தாளிட்ட நம்பி கள்ளமற்ற உள்ளத்துடன் பிள்ளையாரை பிரசாதத்தை உண்ண அழைக்கிறான் . அவர் மௌனமாய் இருப்பதை கண்டு திகைக்கிறான் . அவனுடைய குழந்தையுள்ளம் பிள்ளையார் நேரில் வந்து உண்ணுவார் என்று எண்ணுகிறது . சிறிது நேரம் சென்றது அவர் வராததை கண்டு மனம் வருத்தமடைகிறது . மீண்டும் மீண்டும் கெஞ்சி பார்க்கிறான் . அவர் வராதது கண்டு துக்கம் மேலிட அழுகிறான் . பொறுக்க முடியாமல் பிள்ளையார் வந்து சாப்பிடாவிட்டால் கல்லில் தன் தலையை மோதிக்கொண்டு உயிரை விடுவதாக கூறி தலையை கல்லில் மோதுகிறான் . அவன் வைராக்கியத்தை கண்டு மனமிரங்கிய ஐயன் அவன் முன் தோன்றி அவன் கொண்டுவந்த ப்ரசாதங்களை உண்ணுகிறார் . அனந்த பரவசத்துடன் நம்பி அதை ரசிக்கிறான் .
No comments:
Post a Comment