Wednesday, 12 October 2016

கதவை  தாளிட்ட  நம்பி    கள்ளமற்ற  உள்ளத்துடன்  பிள்ளையாரை பிரசாதத்தை  உண்ண  அழைக்கிறான் . அவர்  மௌனமாய்  இருப்பதை  கண்டு  திகைக்கிறான் . அவனுடைய குழந்தையுள்ளம்  பிள்ளையார்  நேரில்   வந்து  உண்ணுவார்  என்று எண்ணுகிறது . சிறிது  நேரம்  சென்றது  அவர்  வராததை  கண்டு மனம்   வருத்தமடைகிறது . மீண்டும்   மீண்டும்  கெஞ்சி  பார்க்கிறான் . அவர் வராதது  கண்டு  துக்கம்  மேலிட  அழுகிறான் . பொறுக்க  முடியாமல்  பிள்ளையார்  வந்து  சாப்பிடாவிட்டால்  கல்லில்  தன்  தலையை  மோதிக்கொண்டு  உயிரை  விடுவதாக  கூறி  தலையை  கல்லில்  மோதுகிறான் . அவன்  வைராக்கியத்தை  கண்டு  மனமிரங்கிய  ஐயன் அவன்  முன்  தோன்றி  அவன்  கொண்டுவந்த  ப்ரசாதங்களை  உண்ணுகிறார் . அனந்த  பரவசத்துடன்  நம்பி  அதை  ரசிக்கிறான் .

No comments:

Post a Comment