ராஜராஜ சோழன் அத்தி றவுகோலை மீட்டு நம்பியிடம் ஒப்படைத்து தெய்வ பாடல்களை மீட்க வேண்டுகிறார் . நம்பிகள் கதவை திறந்து பார்த்து திகைக்கிறார் . கரையான்களால் சேதமடைந்திருப்பத்தினை கண்டு திகைக்கிறார் . உலகுக்கு தேவையானவை அதில் இருப்பதாக தெய்வீக சக்தியால் அறிந்து இருப்பவைகளை அரும்பாடுபட்டு சேகரித்து தொகுக்க முனைகிறார் . நாம் இன்று காணும் பன்னிரு திருமுறைகள் அவரால் நமக்கு கிடைத்த பொக்கிஷமாகும் . வேதவியாசரால் வேதங்கள் தொகுக்கப்பட்டு உலகுக்கு கிடைத்ததைப்போல் தேவார பாடல்களும் நம்பிகளால் 12 திருமுறைகளாக்க தொகுக்கப்பட்டு நமக்கு தமிழ் மறையாக அளிக்கப்பட சொத்தாகும் . முறையே ஞானசம்பந்தர் , அப்பர் , சுந்தரர் தேவாரங்களும் மாணிக்கவாசகரின் திருவாசகமும் . திருவிசைப்பாவும் , திருமூலரின் திருமந்திரமும் .பல நாயன்மார்களால் அருளப்பெற்ற பாடல்களும் தொகுக்கப்பட்டன . நம்பியாண்டார் நம்பி சுந்தரரின் ' தில்லை வாழ் அந்தணர்தம் ' எனும் பாடலை ஆதாரமாக கொண்டு 63 நாயன்மார்களை அறிமுகப்படுத்தி திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார் . அப்பாடலும் மேலும் பல பக்தர்கள் பாடிய பாடல்கள் 11ஆம் திருமுறை ஆகிறது . பிற்காலத்தில் நம்பியின் பாடல்களை ஆதாரமாக கொண்டு சேக்கிழார் பெருமான் பெரும் ஆராய்ச்சி செய்து 63 நாயன்மார்களின் வரலாறை புராணமாக பாடுகிறார் . அதுவே பெரிய புராணம் என்று பெருமையுடன் 12வது திருமுறையாக தொகுக்கப்பட்டது .
No comments:
Post a Comment