Friday, 14 October 2016

ராஜராஜ சோழன்  அத்தி றவுகோலை  மீட்டு  நம்பியிடம்  ஒப்படைத்து  தெய்வ  பாடல்களை  மீட்க வேண்டுகிறார் . நம்பிகள்  கதவை  திறந்து  பார்த்து  திகைக்கிறார் . கரையான்களால்  சேதமடைந்திருப்பத்தினை  கண்டு  திகைக்கிறார் . உலகுக்கு  தேவையானவை  அதில் இருப்பதாக  தெய்வீக  சக்தியால்  அறிந்து  இருப்பவைகளை  அரும்பாடுபட்டு  சேகரித்து  தொகுக்க  முனைகிறார் . நாம்  இன்று  காணும்  பன்னிரு  திருமுறைகள்  அவரால்  நமக்கு  கிடைத்த  பொக்கிஷமாகும் . வேதவியாசரால்   வேதங்கள்  தொகுக்கப்பட்டு  உலகுக்கு  கிடைத்ததைப்போல்  தேவார  பாடல்களும்  நம்பிகளால்  12 திருமுறைகளாக்க  தொகுக்கப்பட்டு  நமக்கு தமிழ்  மறையாக  அளிக்கப்பட   சொத்தாகும் .  முறையே  ஞானசம்பந்தர் , அப்பர் , சுந்தரர்  தேவாரங்களும்  மாணிக்கவாசகரின்  திருவாசகமும் . திருவிசைப்பாவும் , திருமூலரின்  திருமந்திரமும் .பல  நாயன்மார்களால்  அருளப்பெற்ற  பாடல்களும்  தொகுக்கப்பட்டன . நம்பியாண்டார்  நம்பி  சுந்தரரின்  ' தில்லை  வாழ்  அந்தணர்தம் ' எனும்  பாடலை  ஆதாரமாக  கொண்டு  63 நாயன்மார்களை   அறிமுகப்படுத்தி  திருத்தொண்டர்  திருவந்தாதி  பாடினார் . அப்பாடலும்  மேலும்  பல  பக்தர்கள்  பாடிய  பாடல்கள்  11ஆம்  திருமுறை  ஆகிறது . பிற்காலத்தில்  நம்பியின்  பாடல்களை  ஆதாரமாக  கொண்டு சேக்கிழார்  பெருமான்  பெரும்  ஆராய்ச்சி  செய்து  63 நாயன்மார்களின்  வரலாறை  புராணமாக  பாடுகிறார் . அதுவே  பெரிய  புராணம்  என்று  பெருமையுடன்  12வது      திருமுறையாக  தொகுக்கப்பட்டது .

No comments:

Post a Comment