நம்பி தன் தந்தையுடன் தினமும் கோவிலுக்கு சென்று அவர் பூஜை செய்வதை கூர்ந்து கவனிப்பார் . அவர் கதவை தாளிட்டு கொண்டு பிள்ளையாருக்கு பலகாரங்களை நைவேத்யம் செய்வதையும் கூர்ந்து கவனிப்பார் . ஒருநாள் நம்பியின் தந்தைக்கு அவசரமாக வெளியூர் செல்ல நேர்கிறது. நம்பியின் தாயார் கோயிலில் பூஜை செய்யும் பொறுப்பை நம்பியிடம் ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு கூறுகிறாள் . அவன் சிறு பிள்ளை அவனுக்கு செய்ய தெரியாதோ என்று ஐயப்படுகிறார் . பிறகு வேறு வழியின்றி அவனிடம் ஒப்படைத்து விட்டு வெளியூர் செல்கிறார் .இந்த சம்பவத்தால் தான் நம்பியின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது . அவனது மாசற்ற பக்தி வெளியில் தெரிகிறது . .
very informative. Thank you
ReplyDeleteHema Venkatesh