Thursday, 13 October 2016

ஆனந்தம்  அடைந்த  நம்பி  காலி  தட்டுகளுடன்  வீடு  திரும்புகிறான்  பலகாரங்களை பிள்ளையார்  உண்டதாக  கூறுகிறான்  .ஆனால்  யாரும்  நம்ப  தயாராக  இல்லை .தந்தையும்  அவனை  நம்பாமல்  தண்டிக்கிறார் . ஆனால்  அவன்  திரும்ப  திரும்ப  அதையே  வலியுறுத்துவதை  கண்டு  மறுநாள்  அவனை  பூஜை  செய்ய  அனுப்பிய  தந்தை  தானும்  பின்  தொடர்கிறார் . அவன்  கதவை  தாளிட்டு  கொண்டதும்  சாவி  துவாரம்  வழியாக  அவர் பார்க்கிறார் . அங்கு  நடந்தததை  கண்ட  அவர்  மெயசிலிர்த்து  போகிறார் .வெளியே வந்த  நம்பியை  ஆரத்தழுவி  கண்ணீர்  சொரிகிறார் .நம்பியின்  வாயிலிருந்து  மடை  திறந்தாற்போல்  வரும்  தமிழ்  பாக்களை  கேட்டு  ஆனந்தம்  மேலிட  மகனை  ஆர  தழுவுகிறார் . ஆவலுடன்  நம்பி   ஊட்டிய   உணவை  உண்ட  ஈசன்  அவனுக்கு  ஊட்டிய  அறிவு  ஊற்று  அது . பெற்றோரின்  ஆனந்தத்திற்கு  அளவே  இல்லை .  இவ்வாறு விநாயகரின்  பேரருளால்  பெற்ற  அறிவால்  அவர் நமக்கு  அளித்த  கொடையே  63 நாயன்மார்களின்  வரலாறு . நம்பி  பிற்காலத்தில்  விநாயகரின்  பேரருளால்  நாயன்மார்கள்  அருளி  செய்த  தேவார  பாடல்கள்  தில்லையில்  ஓர்  அறையில்  கிடப்பதாகவும்  திறவுகோல்  தீட்சிதர்கள்  வசம்  இருப்பதாகவும்  உணர்ந்து   மன்னன்  ராஜராஜசோழன்  உதவியால்  அவற்றை  கண்டெடுக்கிறான் .  

No comments:

Post a Comment