சேரமானார் 11 திருமுறையில் 169 முதல் 301 வரை உள்ள பாடல்களை பாடியுள்ளார் . பொன்வண்ணத்தந்தாதி , திருவாரூர் மும்மணிக்கோவை மேலும் கைலாய ஞான உலா ஆகும். சுந்தரரை காண திருவாருவர் சென்ற போது ஈசன் சன்னதியில் பாடியது மும்மணிக்கோவை . சுந்தரர் ஐராவதம் யானையில் கைலை செல்கையில் அவரை தொடர்ந்து தன் குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி தொடர்ந்து கைலாயம் சென்றது அறிவோம் . அப்போது நொடியில் கைலைநாதரை துதித்து அவர் இயற்றி பாடியது கைலாய ஞான உலா . இவ்வாறு நொடியில் பாடல் இயற்றி பாடுபவரை ஆசு கவி என்பர் . இவ்வாறு பெருமைகள் பெற்ற இவரை எவ்வாறு போற்றுவது ? வார்த்தைகளே இல்லை அவரது குரு பூஜை ஆடி மாதத்து ஸ்வாதி நக்ஷத்திரமாகும் .
No comments:
Post a Comment