Sunday, 31 July 2016

சேரமானார்  11 திருமுறையில்  169 முதல்  301 வரை உள்ள  பாடல்களை  பாடியுள்ளார் .  பொன்வண்ணத்தந்தாதி , திருவாரூர்  மும்மணிக்கோவை  மேலும்  கைலாய ஞான  உலா  ஆகும்.  சுந்தரரை  காண  திருவாருவர்  சென்ற  போது  ஈசன்  சன்னதியில்  பாடியது  மும்மணிக்கோவை . சுந்தரர்  ஐராவதம்  யானையில்  கைலை  செல்கையில்  அவரை  தொடர்ந்து  தன்  குதிரையின்  காதில்  பஞ்சாட்சரம்  ஓதி  தொடர்ந்து  கைலாயம்  சென்றது  அறிவோம்  . அப்போது  நொடியில்  கைலைநாதரை  துதித்து  அவர்  இயற்றி  பாடியது  கைலாய  ஞான  உலா . இவ்வாறு  நொடியில்  பாடல்  இயற்றி  பாடுபவரை  ஆசு  கவி  என்பர் . இவ்வாறு  பெருமைகள்  பெற்ற  இவரை  எவ்வாறு  போற்றுவது ? வார்த்தைகளே  இல்லை அவரது  குரு  பூஜை  ஆடி  மாதத்து  ஸ்வாதி  நக்ஷத்திரமாகும் .

No comments:

Post a Comment