Tuesday, 26 July 2016

இந்த  திருமுறையின்  முதல்  பாடல்  ஈசனால் எழுதப்பட்ட  கடிதம்  என்றும்  அது  ஆலவாய்  ஈசன் சேரமான்  பெருமானுக்கு  எழுதியது  என்பதையும்  முன்பே  குறிப்பிட்டிருந்தோம் . அக்கடிதத்தை  கண்ட  சேரமான்  எத்தனை  இன்ப  அதிர்ச்சிக்கு  ஆளாயிருப்பார்   என்று  சொல்லத்தேவை  இல்லை . அவர்  இன்பத்தின்  எல்லைக்கே  சென்றுவிட்டார் . தனக்கு  சொந்தம்  என்று   உள்ள  அத்தனை  வஸ்த்துக்களையும்  மிக்க  மகிழ்ச்சியோடு  கொண்டு  நிரப்பி  விட்டார் . ஏழை  பரம  சிவ  பக்தனான  பாண பத்தர்  வாயடைத்து  நின்று  விட்டார் . அவர்  தனக்கு  தேவையான  ஒருசில  பொருட்களை  எடுத்துக்கொண்டு  நன்றி  சொல்லி  புறப்பட்டார் . ஆனால் சேரமான்  அவரை  தம் யானையில்.  ஏற்றி  வழி  அனுப்பி  வைத்தார்   

No comments:

Post a Comment