அடுத்து 169 முதல் 301 உள்ள பாடல்களை பாடியவர் சேரமான் பெருமானார் ஆவர் . சேரநாட்டில் திருவஞ்சைக்களம் என்னும் ஊரை தலைநகராக கொண்ட ராஜ்ஜியத்தை ஆண்டவர் .அவர் தந்தையும் சிறந்த சிவபக்தர் . சிவத்தொண்டு செய்ய விரும்பிய அவர் ராஜ்ஜிய பொறுப்பை மகனிடம் ஒப்படைத்து விட்டு யாத்திரை செல்ல விரும்பினார் . ஆனால் சேரமான் பெருமானார் அதை தன் சிவ தொண்டிற்கு இடையூறாக கருதினார் . ஈசனை துதித்து தன் மன கவலையை கூறினார் . ஈசன் அவருக்கு ஆசி கூறி அவருக்கு எல்லோருடைய மனதையும் அறியும் ஆற்றலையும் வழங்கினார் , செவ்வனே ஆட்சி புரிய ஆசி கூறினார் . இதன் காரணமாக இவர்க்கு கழற்றறிவார் எனும் பெயரும் உண்டாயிற்று . அவர் அரச பொறுப்பையும் ஏற்றார் .
No comments:
Post a Comment