Saturday, 9 July 2016

அடுத்து  169 முதல்  301  உள்ள  பாடல்களை  பாடியவர்  சேரமான்  பெருமானார்  ஆவர் . சேரநாட்டில்  திருவஞ்சைக்களம்  என்னும்  ஊரை  தலைநகராக  கொண்ட  ராஜ்ஜியத்தை  ஆண்டவர் .அவர்  தந்தையும்  சிறந்த  சிவபக்தர் . சிவத்தொண்டு  செய்ய  விரும்பிய  அவர்  ராஜ்ஜிய  பொறுப்பை  மகனிடம்  ஒப்படைத்து விட்டு  யாத்திரை  செல்ல  விரும்பினார் . ஆனால்  சேரமான்  பெருமானார் அதை  தன்  சிவ  தொண்டிற்கு  இடையூறாக  கருதினார் .  ஈசனை  துதித்து  தன்  மன  கவலையை  கூறினார் . ஈசன்  அவருக்கு  ஆசி  கூறி  அவருக்கு  எல்லோருடைய  மனதையும்  அறியும்  ஆற்றலையும்  வழங்கினார் , செவ்வனே  ஆட்சி  புரிய  ஆசி  கூறினார் . இதன்  காரணமாக  இவர்க்கு  கழற்றறிவார்  எனும்  பெயரும்  உண்டாயிற்று . அவர்  அரச  பொறுப்பையும்  ஏற்றார் . 

No comments:

Post a Comment