11 திருமுறையின் அடுத்த 24 வெண்பாக்களை பாடியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆவார் . அவர் பல்லவ மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர் . சிறந்த சிவபக்தர் . வேத சாஸ்த்திரங்களை நன்கு கற்றுணர்ந் தவர் . பல்லவ சாம்ராஜ்யத்தை பெருக்கி சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தவர் .அவர் ஆட்சியில் மக்கள் மட்டுமின்றி எல்லா ஜீவன்களும் மிக ஆனந்தமாக வாழ்ந்தனர் . ஆனால் அவர் மனம் மட்டும் எப்போதும் அந்த அம்பல கூத்தனை நாடியவாறே இருந்தது . ஆவலை அடக்க முடியாதவராய் ராஜ்ஜிய பாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு சிவாலயங்களை தரிசிக்க பயணமானார் . தில்லை கூத்தனிடம் மனம் பறிகொடுத்தவராய் அவர் மீது பாடல்கள் புனைந்தார் . மேலும் பல ஆலயங்களில் ஐயனை தரிசித்து பாடல்கள் பாடி மனம் மகிழ்ந்தார் . இவ்வாறு சிவாலயங்களை தரிசித்து ஒரு ஐப்பசி மூலம் நாளில் இறைவன் அடி சேர்ந்தார் . 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர் ஆவார் .
No comments:
Post a Comment