அம்மையே என ஈசனால் அழைக்கப்பட மெய்சிலிர்த்து காரைக்கால் அம்மையார் அப்பா! என்று அவர் காலடியில் வீழ்ந்தாள் . மகிழ்ந்த ஈசன் வேண்டிய வரத்தை கேட்க பணிக்கிறார். அம்மையார் பிறவாமை வேண்டுகிறார் , அப்படி பிறந்து விட்டால் உன்னை என்றும் மறவாமை வேண்டும் .இன்னும் வேண்டும் அரவா! நான் பாடி நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க ' என வேண்டுகிறாள் . மனமுவந்த ஈசன் அவரை ஆலன்காட்டிற்கு செல்லுமாறு அங்கு தம் ஆனந்த நடனத்தை காணலாம் என்று உரைக்கிறார் . மனமகிழ்ந்த அம்மையார் தலையாலேயே நடந்து ஆலங்காட்டை அடைகிறார் .அங்கு ஈசன் அவளுக்கு காட்சி அளிக்கிறார் 'கொங்கை திரங்கி நரம்பெழுந்து ' எனும் மூத்த திருபதிகம் பாட ஐயன் நடனமாடுகிறார் . அம்மை ஆனந்தத்திற்கு எல்லை ஏது ? அம்மையார் திருஞான சம்பந்தருக்கு முன்பு இருந்தவர் . அவரே முதலில் பதிகம் பாடியவர் . ஆதலால் இது மூத்த பதிகம் ஆகிறது .அவர் பாடிய மற்றவை "அற்புத திருவந்தாதி , திரு இரட்டை மணிமாலை ஆகும் .
No comments:
Post a Comment