Friday, 17 June 2016

அம்மையே  என  ஈசனால்  அழைக்கப்பட  மெய்சிலிர்த்து  காரைக்கால்  அம்மையார்  அப்பா! என்று  அவர்  காலடியில்  வீழ்ந்தாள் . மகிழ்ந்த  ஈசன்  வேண்டிய  வரத்தை  கேட்க  பணிக்கிறார். அம்மையார்  பிறவாமை  வேண்டுகிறார் , அப்படி  பிறந்து  விட்டால்  உன்னை  என்றும்  மறவாமை  வேண்டும் .இன்னும்  வேண்டும்  அரவா!  நான்  பாடி  நீ  ஆடும்போது  உன்  அடியின்  கீழ்  இருக்க '  என வேண்டுகிறாள் . மனமுவந்த  ஈசன்  அவரை   ஆலன்காட்டிற்கு  செல்லுமாறு  அங்கு  தம்  ஆனந்த  நடனத்தை  காணலாம்  என்று  உரைக்கிறார் . மனமகிழ்ந்த  அம்மையார்  தலையாலேயே  நடந்து  ஆலங்காட்டை  அடைகிறார் .அங்கு  ஈசன்  அவளுக்கு  காட்சி  அளிக்கிறார் 'கொங்கை  திரங்கி  நரம்பெழுந்து '  எனும்  மூத்த  திருபதிகம்  பாட  ஐயன்  நடனமாடுகிறார் . அம்மை  ஆனந்தத்திற்கு  எல்லை  ஏது ? அம்மையார்  திருஞான சம்பந்தருக்கு  முன்பு  இருந்தவர் . அவரே  முதலில்  பதிகம்  பாடியவர் . ஆதலால்  இது  மூத்த  பதிகம்  ஆகிறது .அவர்  பாடிய  மற்றவை  "அற்புத  திருவந்தாதி , திரு  இரட்டை மணிமாலை   ஆகும் . 

No comments:

Post a Comment