Sunday, 6 March 2016

பஞ்சமா  பாதகங்கள்  அறவே  ஒழிக்கப்பட  வேண்டியவை  என்று  எச்சரித்த  திருமூலர்  கொல்லாமை , பிறன்  மனைவி  நாடாமை ,பொய் பேசாமை , கள்ளுண்ணாமை , எல்லா  ஜீவன்களிடத்தும்  அன்பு  செலுத்துவது   போன்ற  நற்பண்புகளை  சிறந்த  அறமாக  கைபற்றும்படி  போதிக்கிறார் . யாகத்தின்  சிறப்பை  கூறுகிறார் . யாகம்  பொது  நலனுக்காக  செய்யப்படுகிறது . நாட்டில்  மும்மாரி   பொழிந்து   பயிர்கள்  செழிப்புறவும் , இயற்கை உத்பாதங்கள்  எதுவும்  நேராமலும்  மக்கள்  செழுமையுடன்  குறையின்றி  வாழ  பஞ்ச  பூ தங்களின் அதிதே வதைகளையும்   மற்ற  தேவர்களையும்  நன்றியுடன்  போற்றும்  பொருட்டு  செய்யப்படுகிறது .   

No comments:

Post a Comment