Wednesday, 30 March 2016

தானத்தில்  சிறந்தது  அன்னதானம் .மனிதன்  அல்லும்  பகலும்  உழைப்பது  ஒரு  சாண்  வயிற்றை  நிரப்பவே . நாம்  என்ன  தானம்  செய்தாலும்  பெறுபவர்க்கு   முழுமையாக திருப்தி அடையாமல்  இன்னும்  கொஞ்சம்  கிடைத்தால்  நலமாக  இருக்கும்  என்றே  தோன்றும் . ஆனால்  அன்னதானம்  செய்யும்  போது  வயிறு  நிறைந்த  எந்த  மனிதனும்  மனம்  திருப்தி  அடைந்து   அன்னமிட்டவரை  வாயார  வாழ்த்துவான் .பசியை  போக்குவது  நம்மால்  செய்யக்கூடிய  மிக  சிறந்த  தர்மம் . காக்கைகளை  பாருங்கள் . ஒரு  காக்கை  உணவைக்கண்டால்  தான்  மட்டும்  உண்ணாது  மற்ற  காக்கைகளை  அழைத்து  எல்லாம்  சேர்ந்தே  உண்ணும் . ஐந்தறிவு  படைத்த  அவையே     இத்தகைய  பண்பை  கடைபிடிக்கும்போது  ஆறறிவு  படைத்த   மனிதன்  கடைபிடிக்காமல் இருப்பது  வெட்கம் .

No comments:

Post a Comment