அடுத்து 183 முதல் 194 பாடல் வரை பாடல்களை பாடியவர் பூந்துருத்தி நம்பி காட நம்பி .இவர் திருவையாறு அருகில் உள்ள பூந்துருத்தி எனும் ஊரை சேர்ந்தவர் . சிறந்த சிவபக்தர் . இவர் எல்லா சிவாலயங்களையும் சேவித்தபடி தேவாரங்களை மனமுருக பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் . இவர் சம்பந்தர் , அப்பர் ,சுந்தரர் , கண்ணப்பர் மேலும் பல பல நாயன்மார்களை பாடி இருக்கிறார் . இவர் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் . அவர் பாடிய பாக்களில் சில.
எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமையாளும்
சம்பந்தன் காழியர் கோன் தன்னையும் ஆட்கொண்டருளி
அம்புந்து கண்ணாலும் தானும் அணிதில்லை ச்
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே |
எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமையாளும்
சம்பந்தன் காழியர் கோன் தன்னையும் ஆட்கொண்டருளி
அம்புந்து கண்ணாலும் தானும் அணிதில்லை ச்
செம்பொன் செய் அம்பலமே சேர்ந்திருக்கை ஆயிற்றே |
No comments:
Post a Comment