கருவுர்தேவர் வடமாநிலங்களில் பல திருத்தலங்களை சேவித்துகொண்டு வந்து திருப்புடைமருதூர் வந்தடைகிறார் . தாமிரபரணி பெருக்கெடுத்துகொண்டு ஓடியதால் அவர் நரம்புநாதரை அழைக்க தண்ணீர் வழிவிட்டதாகவும் ஈசன் அவருக்கு பாத தீக்ஷை வழங்கியதாகவும் கூறப்படுகிறது . பிறகு பொதிகை மலை அகத்தியரை வழிபடுகிறார் .ராஜராஜசோழன் தஞ்சையில் அடிமுடி காண முடியாத ஈசனுக்கு பிம்மாண்டமான கோவில் கட்டுகிறான் . பிரம்மாண்டமான நந்தியும் லிங்கமும் அமைக்க எண்ணுகிறான் . அஷ்டபந்தன மருந்து மருந்து கெட்டிபடாமல் அத் தனை பெரிய லிங்க வடிவை பிரதிஷ்டை செய்ய இயலாமல் மலைத்தனர் . அப்போது போகநாதர் ஆணையின் பேரில் கரூவூர் தேவர் தன் யோகசித்தியால் மருந்தை கெட்டிப்பட செய்து லிங்க பிரதிஷ்டை குறையில்லாமல் நிறைவேற்றுகிறார் . இவ்வாறு ராஜராஜசோழனுக்கு நெருக்கமாகிறார் . இவர் ஆற்றிய சாதனைகள் அநேகம் .
No comments:
Post a Comment