Saturday, 10 October 2015

cont;

கருவுர்தேவர்  வடமாநிலங்களில்  பல  திருத்தலங்களை  சேவித்துகொண்டு   வந்து  திருப்புடைமருதூர்  வந்தடைகிறார் . தாமிரபரணி  பெருக்கெடுத்துகொண்டு  ஓடியதால்  அவர்  நரம்புநாதரை   அழைக்க   தண்ணீர்  வழிவிட்டதாகவும்  ஈசன்  அவருக்கு  பாத  தீக்ஷை  வழங்கியதாகவும்  கூறப்படுகிறது . பிறகு  பொதிகை  மலை  அகத்தியரை  வழிபடுகிறார் .ராஜராஜசோழன்  தஞ்சையில்  அடிமுடி  காண  முடியாத  ஈசனுக்கு  பிம்மாண்டமான  கோவில்  கட்டுகிறான் . பிரம்மாண்டமான  நந்தியும்  லிங்கமும்  அமைக்க  எண்ணுகிறான் . அஷ்டபந்தன  மருந்து  மருந்து  கெட்டிபடாமல்  அத் தனை  பெரிய  லிங்க  வடிவை  பிரதிஷ்டை  செய்ய  இயலாமல்  மலைத்தனர் . அப்போது  போகநாதர்  ஆணையின்  பேரில்  கரூவூர்  தேவர்  தன்  யோகசித்தியால்  மருந்தை  கெட்டிப்பட  செய்து  லிங்க  பிரதிஷ்டை  குறையில்லாமல்  நிறைவேற்றுகிறார் . இவ்வாறு  ராஜராஜசோழனுக்கு  நெருக்கமாகிறார் . இவர்  ஆற்றிய சாதனைகள்  அநேகம் . 

No comments:

Post a Comment