Thursday, 3 September 2015

thiruvasakam cont.

மாணிக்கவாசகர்  பக்தி  அதிசயிக்கத்தக்கது . ஈசனிடம்  திருவடி   தீக்ஷை  பெற்றபின்  அவர்  தன்னை  முழுமையாக   அவரிடம்  அர்ப்பணித்து  விட்டார் . ஈசனை  தவிர  வேறு  சிந்தனையே  அவருக்கு  எழவில்லை . சிக்கென  பிடித்தேன்  என்று  பாடுகிறார் . எத்தனை  கடுமையான  சோதனைகளுக்கு  ஆட்படு த்தப்பட்ட  போதிலும்  அவர் தன்  நிலை  மாறவில்லை.  அத்தனை  சோதனைகளையும்  அவர்  ஏற்றுக்கொண்ட  பாங்கு  ஈசனையே  வியக்க  வைத்திருக்கும் . அதுவே  அவரை கூலி    ஆளாக  வரவைத்து பிரம்படியும்பட  வைத்தது . இத்தனைக்கு  பிறகும்  அவர்   தன்னை  எத்தனை  தாழ்த்தி  கொண்டு  பாடுகிறார்  . அவருடைய  தன்னடக்கம்  எல்லை  இல்லாதது .  

No comments:

Post a Comment