Monday, 21 September 2015

thirumaalikaithevar

9ஆம்  திருமுறை  திருவிசைப்பா, திருப்பல்லாண்டு   அடங்கிய  301 பாக்களை  கொண்டது .  முதல்  45 பாக்கள்  திருமாளிகை  தேவரால்  பாடப்பட்டவை . இவர்  சைவ  வேளாளர்  குலத்தை  சேர்ந்தவர் . இவரின்  முன்னோர்கள்  மாளிகை  மடத்தை  செர்ந்தவர்கள்  . ஆதலால்  இவர்  மாளிகைதேவர்  என்று  அறியப்பட்டார் . சிறந்த  சிவபக்தர் . அவர் திரு ஆவடுதுறை யில்  மடம்  அமைத்து  அங்கு  ஒரு  அரச  மரத்தடியில்  த்யானத்தில்  அமர்ந்தார் . போகநாதரிடம்   ஞான  உபதேசம்  பெற்றார் . சைவ சித்தாந்த்தத்தில்  ஆராய்ச்சி  மேற்கொண்டார் . சிறந்த  யோக  சித்திகளை   பெற்றதால்  இவர்  தேகம்  மிக  ஒளிபெற்று  பார்ப்போரை  கவர்வதாக  இருந்தது . தன்  யோக  சித்தியால்  இவர்  பலப்பல  அதிசயங்களை  நிகழ்த்தியுள்ளார் .

 

No comments:

Post a Comment