9ஆம் திருமுறை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு அடங்கிய 301 பாக்களை கொண்டது . முதல் 45 பாக்கள் திருமாளிகை தேவரால் பாடப்பட்டவை . இவர் சைவ வேளாளர் குலத்தை சேர்ந்தவர் . இவரின் முன்னோர்கள் மாளிகை மடத்தை செர்ந்தவர்கள் . ஆதலால் இவர் மாளிகைதேவர் என்று அறியப்பட்டார் . சிறந்த சிவபக்தர் . அவர் திரு ஆவடுதுறை யில் மடம் அமைத்து அங்கு ஒரு அரச மரத்தடியில் த்யானத்தில் அமர்ந்தார் . போகநாதரிடம் ஞான உபதேசம் பெற்றார் . சைவ சித்தாந்த்தத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார் . சிறந்த யோக சித்திகளை பெற்றதால் இவர் தேகம் மிக ஒளிபெற்று பார்ப்போரை கவர்வதாக இருந்தது . தன் யோக சித்தியால் இவர் பலப்பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார் .
No comments:
Post a Comment